search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்ஜாமீன் மனு தாக்கல்"

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்கால நிவாரணம் பெற்ற ப.சிதம்பரம் தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #ChidambaramAnticipatoryBail
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி  சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தியது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.



    இந்நிலையில், ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. அதன்படி மே 31-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. எனவே, தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் இன்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூன் 5-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இரண்டாவது வழக்கில் முன்ஜாமீன் கேட்டுள்ளார். #INXMediaCase #ChidambaramAnticipatoryBail
    மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதிய சம்பவத்தில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னை கைது செய்யாமல் இருக்க சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #seeman

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை வைகோ, சீமானை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் உருவானது.

    இதுதொடர்பாக திருச்சி விமான நிலைய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சீமானை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் திருச்சி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்கும் பொருட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று வக்கீல் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.

    சீமான், லஜபதிராய், நெல்லை சிவா, திருச்சி மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு ஆகிய 4 பேருக்கும் முன் ஜாமீன் கேட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் திருச்சி விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களிடையே மோதல் சம்பவம் நடந்தபோது சீமான் உள்ளிட்டோர் விமான நிலையத்தின் உள் பகுதியில் இருந்ததாகவும், தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கும் இந்த மோதலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #seeman #vaiko

    ×